ஜெ., சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் திக்., திக்.,- அடுத்த வாரத்தில் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட்
ALADMK, assert, India, New delhi, shashikala February 6, 2017,புதுடில்லி: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு தயாராக உள்ளது என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெ., சசிகலா, இளவரசி , சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் கர்நாடக மாநிலம் சார்பில் வக்கீல் நேரில் ஆஜரானார். இவர், நீதிபதிகளிடம் இந்த வழக்கில் தீர்ப்பு இழுக்கப்படிக்கப்பட்டு வருகிறது. இந்த தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என கேட்டார். இதற்கு பதில் அளித்த நீதிபதிகள்; இந்த வழக்கில், தீர்ப்பு எழுதப்பட்டு ஏறக்குறைய தயாராகி விட்டது. அடுத்த வாரத்தில் தீர்ப்பு வெளியாகும் என்று தெரிவித்தனர்.
பாதிப்பை ஏற்படுத்தும் :
ஜெ., மறைந்த நிலையில் , சசிகலா நேற்றுதான் ( பிப்., 5 ம்தேதி) அதிமுக சட்ட சபை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தமிழக முதல்வராக பதவி ஏற்க இருக்கும் நேரத்தில் இந்த தீர்ப்பு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
English Summary:
NEW DELHI: The late Chief Minister and AIADMK general secretary Shashikala assets on the Supreme Court judges said that the verdict in the case is ready. J., Shashikala, princess, Suthaharan behalf of the state of Karnataka in the disproportionate assets case in appellate lawyer appeared in person.
Source: G-News

Leave a comment
You must be logged in to post a comment.