கேரளாவில் கொடூரச்செயல்: கல்லூரி வளாகத்தில் மாணவி எரி

college campus, kottayam, pouring kerala
கோட்டயம்: தன்னை விட்டு பிரிந்ததால், கல்லூரி வளாகத்தில் மாணவியை பெட்ரோல் ஊற்றி வாலிபர் ஒருவர் எரித்து கொன்றார். இந்த சம்பவத்தில் அவரும் மரணமடைந்தார்.

காதல் முறிவு:

கேரள மாநிலம், கோட்டயம் மருத்துவ கல்லூரி முன்னாள் மாணவர் ஆதர்ஷ், 26. இவர் அதே கல்லூரியில் பிசியோதெரபி படித்து வருபவர் லஷ்மி. இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால், சில காரணங்களுக்காக லஷ்மி தனது காதலை முறித்துக்கொண்டார். இதனால் ஆதர்ஷ் சில நாட்களாக விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று லஷ்மி வகுப்பறையில் சக மாணவிகளுடன் இருந்தார். அப்போது அங்கு வந்த ஆதர்ஷ், லஷ்மி மீது பெட்ரோலை ஊற்றினார். இதனால், லஷ்மியும், அங்கிருந்த மாணவிகளும் அலறியடித்து வகுப்பை விட்டு வெளியே ஓடினர்.

சிகிச்சை:

இருப்பினும் தொடர்ந்து, துரத்தி வந்த ஆதர்ஷ், லைட்டர் மூலம் தீ வைத்தார். தொடர்ந்து ஆதர்ஷ், தன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர். அவர்களை காப்பாற்ற முயன்ற மாணவர்கள் 2 பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

கல்லூரியில் ஸ்டிரைக் காரணமாக பல மாணவர்கள் அங்கு இல்லை. செவ்வாய்க்கிழமை தேர்வு எழுத ஆதர்ஷ் கல்லூரி வந்திருந்ததால், அவர் நேற்று கல்லூரிக்குள் நுழைந்த போது யாரும் தடுக்கவில்லை. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary:

Kottayam: himself separated from the college campus student pouring gasoline burned and killed a teenager. He died in this incident.

Source: கேரளாவில் கொடூரச்செயல்: கல்லூரி வளாகத்தில் மாணவி எரி – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top