சையது மோடி பாட்மின்டன்: சிந்து, சமீர் வர்மா சாம்பியன்

badminton, lucknow, sindh, syed modi
லக்னோ: சையது மோடி பாட்மின்டன் தொடரில் இந்திய வீராங்கனை சிந்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

உ.பி., தலைநகர் லக்னோவில், சையது மோடி கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சிந்து, இந்தோனேஷியா
வின் கிரிகோரியா மரிஸ்கா மோதினர். அபாரமாக ஆடிய சிந்து 21-13, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு:

ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சமீர் வர்மா, சாய் பிரனீத் மோதினர். மொத்தம் 44 நிமிடம் வரை சென்ற போட்டியில் அசத்தலாக ஆடிய சமீர் வர்மா 21-19, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

English summary:

Lucknow: Sindh Syed Modi India’s badminton champion taker in the series. 

Source: சையது மோடி பாட்மின்டன்: சிந்து, சமீர் வர்மா சாம்பியன் – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top