தோல்வியில் முடிந்த போலீஸ் முயற்சி
chennai, jallikattu, marina beach, struggle, tami nadu January 18, 2017,
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் குவிந்துள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் போலீசார் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
ஜல்லிக்கட்டு நடத்த கோரி,சென்னை மெரினா கடற்கரையில் நேற்று காலை முதல் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 24 மணி நேரத்தை கடந்து போராட்டம் நீடிக்கிறது. நேற்று இரவு, 2:00 மணிக்கு அவர்களுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
போலீஸ் பேச்சுவார்த்தை:
இன்று காலை முதல், அப்பகுதியில் கூட்டம் அதிகரித்து வருகிறது. மதியம், 12:15 மணிக்கு மயிலாப்பூர் போலீஸ் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் மாணவர்களிடம் பேசியதாவது:
நான், சில ஆண்டுகள் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் எஸ்.பி.,யாக பணியாற்றி உள்ளேன். அப்போது மூன்று முறை வெற்றிகரமாக ஜல்லிக்கட்டை நடத்தி உள்ளேன். அந்த வகையில் தான்உங்களுடன் பேச வந்துள்ளேன். இங்குள்ள போராட்டகாரர்கள் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும்; மதுரை அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
ஜல்லிக்கட்டை நடத்த, பிராணிகள் நல சட்டத்தின் 27 வது பிரிவை திருத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து பேசவும், பிரச்னைக்கு தீர்வு காணவும் உங்களின் பிரதிநிதிகள் சிலர் பேச்சு வார்த்தைக்கு வர வேண்டும்.
இவ்வாறு பாலகிருஷ்ணன் பேசினார்.
ஆனால், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர். இதனால், துணை ஆணையர் பாலகிருஷ்ணன் ஏமாற்றத்துடன் சென்றார்.
Source: தோல்வியில் முடிந்த போலீஸ் முயற்சி – G-News
Leave a comment
You must be logged in to post a comment.