ரிசர்வ் வங்கி செயல்பாட்டில் மோடியின் ஆதிக்கம்: ராகுல்

congres, India, modi, rahul gandhi, Reserve bank of india, rishikesh
ரிஷிகேஷ் : ரிசர்வ் வங்கியின் செயல்பாட்டில் பிரதமர் மோடியின் ஆதிக்கம் உள்ளதாக காங்., துணைத் தலைவர் ராகுல் குற்றம் சாட்டினார்.

சர்வாதிகார பிரதமர்:

உத்திரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் பேசியதாவது: செல்லாத நோட்டு பற்றி அறிவிப்பதற்கு முதல் நாள் தான், ரிசர்வ் வங்கியின் கவர்னருக்கே, அதுபற்றி தெரியும். ரிசர்வ் வங்கி, ஆட்சி மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்ட, சுதந்திரமான அமைப்பு; ஆனால், பிரதமர் மோடி, அதை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிக்கிறார்; சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறார். பிரதமரின் நடவடிக்கை, மோசமான முன்னுதாரணம்.

விரும்பியதை அடைவார்:

ரூ.15 லட்சம் மதிப்புடைய கோட் – சூட் அணியும் மோடி, ராட்டையைச் சுற்றி நூல் நூற்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பத்திரிகை விளம்பரங்களில் பிரதமருடன் பெருநிறுவன அதிபர்கள் காட்சியப்பதிலிருந்து, முதலாளிகளின் நலனுக்காகவே அவர் பாடுபடுவது தெளிவாகிறது. தாம் விரும்பியதை என்ன விலை கொடுத்தும் செயல்படுத்த வேண்டும் என்பதில் மோடி தீவிரமாக இருக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பா.ஜ., பதிலடி:

ராகுலின் இக்குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த பா.ஜ., தேசிய செயலர் ஸ்ரீகாந்த் சர்மா தெரிவித்ததாவது: மகாத்மா காந்தியின் பெயரை தவறாக பயன்படுத்துவது காங்., கட்சிதான். மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதில் தான் காங்., கவனம் உள்ளது. 5 மாநில சட்ட சபை தேர்தலில் காங்., படுதோல்வி உறுதி என்பதையறிந்து பிரதமர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ராகுல் கூறி வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English Summary:

Rishikesh: The Reserve Bank is in the process of domination of Modi Cong., Rahul alleged.

Source: ரிசர்வ் வங்கி செயல்பாட்டில் மோடியின் ஆதிக்கம்: ராகுல் – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top