தமிழக கலாசாரத்தின் மீதான தாக்குதல்: ஸ்டாலின் கண்டனம்
chennai, dmk, jallikattu, MK stalin, tamil nadu January 17, 2017,
சென்னை: ஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்கள் மீதான தாக்குதல் தமிழரின் கலாசாரத்தின் மீதான தாக்குதல் என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: 21 மணி நேரத்திற்கும் மேலாக போராடிய இளைஞர்கள் மீது தடியடி நடத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது. இளைஞர்கள் மீதான தாக்குதல் தமிழரின் பண்பாடு மற்றும் கலாச்சார மீதான தாக்குதல். போராட்டக்காரர்களுக்கு உணவு, குடிநீர் தர தடுப்பது தமிழகத்தில் நடக்கும் கொடுங்கோல் ஆட்சியை காட்டுகிறது.
தை மாதம் முடிவதற்குள் .,
கைது செய்யப்பட்ட இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு தேவையான நடைமுறையை கடைபிடிக்க வேண்டும். தை மாதம் முடிவதற்குள் ஜல்லிக்கட்டு நடப்பதற்காக மத்திய மாநில அரசுகள் அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
English Summary:
Chennai: Tamil Jallikattu fought for the attack on the youth culture as an attack on the DMK leader MK Stalin said act.
Source: தமிழக கலாசாரத்தின் மீதான தாக்குதல்: ஸ்டாலின் கண்டனம் – G-News
Leave a comment
You must be logged in to post a comment.