புளோரிடா விமானநிலையத்தில் துப்பாக்கிச்சூடு; 5 பேர் பலி

airport, florida, injured, killed, world
புளோரிடா: புளோரிடா விமான நிலையத்தில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் உயிரிழந்தனர்; 9 பேர் காயம் அடைந்தனர்.

துப்பாக்கிச்சூடு:

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள போர்ட் லாண்டர்டேல் சர்வதேச விமான நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபர், பயணிகள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுடத் துவங்கினான். இதனால், பதற்றமடைந்த பயணிகள் ஓடத் துவங்கினர்.

5 பேர் பலி:

இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியானதாகவும் 9 பேர் காயம் அடைந்தனர். பின் அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில், மர்ம நபர் பிடிபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

English summary:

Florida : Florida Airport unidentified person opened fire, killing 5 people; 9 people were injured.

Source: புளோரிடா விமானநிலையத்தில் துப்பாக்கிச்சூடு; 5 பேர் பலி – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top