" பேச கற்கும் ராகுல்" – பிரதமர் மோடி

India, modi, rahul gandhi, varanasi
வாரணாசி: காங்., துணை தலைவர் ராகுல் பேச கற்று கொண்டிரு்கிறார் . என்ன பேசுவது என்றே அவருக்கு தெரியவில்லை என உ .பி., மாநிலம் வாரணாசியில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பேசுகையில்;

ஒத்துழைப்பு வழங்க வேண்டும்:

கறுப்பு பண ஒழிப்பின் மூலம் இந்தியா தூய்மை அடையும். தற்போது நேர்மையான பாதையில் இந்தியா சென்று கொண்டிருக்கிறது. பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டபோது எனக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். கள்ள நோட்டு புழக்கத்திற்கு பாகிஸ்தான் துணை போகிறது. கறுப்பு மற்றும் கள்ளப்பணம் ஒழிப்பு மிக சிரமமான காரியம். பெரும் சவாலாக உள்ளது.

கறுப்பு பணஒழிப்பில் இன்னும் மக்கள் எனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பணம் இல்லாத வர்த்தனை வேண்டும். இளைஞர்கள் ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்யுங்கள் மொபைல் ஆப் பயன்படுத்துங்கள்.

பூகம்பம் வருமா ?

ராகுல் என்ன பேசுகிறார் என்று அவருக்கே புரியவில்லை. இதில் வேறு அவர் பார்லி.,யில் பேசினால் பூகம்பம் வெடிக்கும் என்கிறார். ஒன்றும் வராது. பேசுவது எப்படி என்று அவர் கற்று கொண்டிருக்கிறார். அவர் பேசுவதைப் பார்த்து எனக்கு சிரிப்பு தான் வருகிறது. நாட்டில் ஊழல், கறுப்பு பணம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் புதிய ரூபாய் நோட்டு கொள்கை அறிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்கட்சிகள் இதனை எதிரக்கிறது. இதில் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

English Summary:

Varanasi: Cong., Vice President Rahul now only  learned to speak. He will be speaking of what we do not know pi., Varanasi recasting the ESI scheme, the foundation laying ceremony of the hospital, said Prime Minister Narendra Modi;

Source: " பேச கற்கும் ராகுல்" – பிரதமர் மோடி – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top