பார்லி., குழுவில் விளக்கமளிக்கிறார் ஆர்.பி.ஐ., கவர்னர்

bank notes, barley, central bank governor, India, New delhi
புதுடில்லி : ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து பார்லி., குழுவிடம், ரிசர்வ் வங்கி கவர்னர் விளக்கம் அளிக்க உள்ளார்.

கறுப்பு பண ஒழிப்பு :

கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்காக, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு கடந்த நவ.,8ம் தேதி அறிவித்தது. மேலும் புதிய ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுகளை வெளியிட்டது. இந்த திடீர் அறிவிப்பால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இது குறுகிய கால சிரமம் எனவும், 50 நாட்கள் அவகாசம் வழங்கும்படியும் பொதுமக்களிடம் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

விளக்கம் :

இந்நிலையில் ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வாபஸ் பெற்றது மற்றும் அதன் விளைவுகள் குறித்து, பார்லி., குழுவிடம் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் வரும் 22ம் தேதி(டிச.,22) விளக்கம் அளிக்க உள்ளார். இக்கூட்டம் 22ம் தேதி காலை 11 மணிக்கு துவங்கும் என பார்லி., இணையதளம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary:

NEW DELHI : banknote issue barley., Told the committee, is to explain the central bank governor

Source: பார்லி., குழுவில் விளக்கமளிக்கிறார் ஆர்.பி.ஐ., கவர்னர் – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top