தேசிய கீதத்தை அவமதித்து கருத்து பதிவிட்ட கேரள எழுத்தாளர் கைது

kamal writer, kerala, thiruvananthapuram
திருவனந்தபுரம் : தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்ததாக கேரள எழுத்தாளர் கமல் சி.சவரா கைது செய்யப்பட்டுள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி நாடு முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்களில் திரைப்படம் போடுவதற்கு முன்னால் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொல்லம் மாவட்டத்தில் உள்ள கருனகப்பள்ளி காவல் நிலையத்தில் கமல் சி.சவரா மீது தேசிய கீதத்தை அவமதித்ததாக பா.ஜ.,வின் இளைஞர் பிரிவான யுவா மோர்சா அமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

இதன் அடிப்படையில் கொல்லம் போலீசாரின் உத்தரவின் பேரில் கோழிக்கோடு பகுதியில் நடக்கவு போலீசாரால் எழுத்தாளர் கமல் கைது செய்யப்பட்டார்.

English Summary:

 Thiruvananthapuram: The national anthem was an affront to post a comment on Facebook  Kerala writer Kamal was arrested. 

Source: தேசிய கீதத்தை அவமதித்து கருத்து பதிவிட்ட கேரள எழுத்தாளர் கைது – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top