எம்.ஜி.ஆர். நினைவிடம் பெயர் மாற்றம் அமைச்சரவை தீர்மானம்

AIADMK, chennai, jayalalitha, m.g.r, panneer selvam, tamil nadu
சென்னை: எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் பெயரை மாற்றுவது என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அமைச்சரவை தீர்மானம்:

முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் பெயரை மாற்றுவது எனவும், அதற்கு பதிலாக எம்.ஜி.ஆர்.மற்றும் ஜெயலலிதா நினைவிடம் என பெயர்மாற்றி அமைப்பது எனவும், ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரைப்பது மற்றும் பார்லி மென்ட்டில் வெண்கலச்சிலை அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவது எனவும்,. மேலும் ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் வைக்க வேண்டும் எனவும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜெ.,நினைவிடம் அமைக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு:

ஜெ.,நினைவிடம் அமைக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். இது குறித்து அவர் கூறுகையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.15 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என கூறினார்.

English Summary:

M.G.R Changing the name of the memorial resolution passed at a meeting of the State Cabinet.

Source: எம்.ஜி.ஆர். நினைவிடம் பெயர் மாற்றம் அமைச்சரவை தீர்மானம் – G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top