மதுரை அருகே வெட்டிக் கொல்லப்பட்ட காளீஸ்வரன் – பழிவாங்கும் படலத்தின் முழு பின்னணி
Uncategorized March 23, 2025,
மதுரை: மதுரையில் திமுக பிரமுகர் விகே குருசாமியின் சகோதரி மகன் காளீஸ்வரன் நேற்று முன்தினம் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில், இதன் பின்னணியில் இருக்கும் பழிவாங்கும் படலத்தின் முழு விவரம் என்ன?
மதுரை காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வீகே குருசாமி, ராஜபாண்டி. திமுக, அதிமுகவை சேர்ந்த இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் மதுரை மண்டல தலைவர்களாகவும் இருந்துள்ளனர். இருவருக்கும் இடையே உள்ளாட்சி தேர்தலில் முன்விரோதம் ஏற்பட்டது. ராஜாபாண்டிக்கு உதவியாளராக இருந்த அவரது அண்ணன் மகன் சின்ன முனீஸ் என்பவர் 2003-ல் கொல்லப்பட்டார். இது தொடர்பாக வீகே குருசாமி மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்த பாம்பு பாண்டி, மாரிமுத்து உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இருதரப்பிலும் மோதல் அதிகரித்தது. 2008-ல் சின்ன முனிஸ் கொலைக்கு பழிக்கு பழியாக வழுக்கை முனிஸை – ராஜாபாண்டி தரப்பு கொலை செய்தது.
இதன்பின், சின்ன முனிஸ் தம்பி வெள்ளைக்காளி, குருசாமி உறவினர்கள் மாரிமுத்து, ராமமூர்த்தி ஆகியோரை கொன்றார். சின்ன முனீஸ் கொலை வழக்கில் தொடர்படைய குருசாமியின் தங்கை கணவர் பாம்பு பாண்டியை வெள்ளக்காளி, அவரது நண்பர்கள் சகுனி கார்த்தி, முத்து இருளாண்டி ஆகியோர் 2013-ல் வெங்காய மார்க்கெட்டில் கொலை செய்தனர். இதில் ஆத்திரமடைந்த குருசாமி தரப்பு, சகுனி கார்த்தி தாய் மாமா மயில் முருகன் 2013-ல் மதுரை நடனா தியேட்டர் அருகே கொல்லப்பட்டார். மயில்முருகன் கொலைக்கு பதிலாக 2015-ல் குருசாமி மகன் மணி நண்பர் முனியசாமி கொல்லப்பட்டார்.
….
Source: Hindu
Read More >> மதுரை அருகே வெட்டிக் கொல்லப்பட்ட காளீஸ்வரன் – பழிவாங்கும் படலத்தின் முழு பின்னணி