“அடுத்த இலக்கு நான்தான்…” – நெல்லையில் கொல்லப்பட்ட முன்னாள் எஸ்.ஐ மகன் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
Uncategorized March 22, 2025,
திருநெல்வேலி: “தந்தைக்கு ஏற்பட்ட நிலை எனக்கும் வரலாம்” என்று கூறி, நெல்லையில் கொலை செய்யப்பட்ட ஓய்வுபெற்ற எஸ்.ஐ ஜாகிர் உசேன் பிஜிலியின் மகன் ஒரு வீடியோ வெளியிட்டதைத் தொடர்ந்து, அவரது வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருநெல்வேலி டவுன், தொட்டிப்பாலம் தெருவைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் பிஜிலி (60). ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளரான இவர், டவுனில் உள்ள ஒரு பள்ளிவாசலில் முத்தவல்லியாக இருந்தார். இவர் கடந்த 18-ம் தேதி அதிகாலை ரம்ஜான் நோன்பை முன்னிட்டு அருகே உள்ள ஜாமியா தைக்கா பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றுகொண்டு இருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.
….
Source: Hindu
Read More >> “அடுத்த இலக்கு நான்தான்…” – நெல்லையில் கொல்லப்பட்ட முன்னாள் எஸ்.ஐ மகன் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு