சிதம்பரம் அருகே காவலரை தாக்கிய திருடனை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த ஆய்வாளர்

சிதம்பரம் அருகே காவலரை தாக்கிய திருடனை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த ஆய்வாளர்

Uncategorized

கடலூர்: சிதம்பரம் அருகே திருட்டு வழக்கில் தொடர்புடையவர் காவலரை தாக்கிய நிலையில் காவல் ஆய்வாளர் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். திருட்டு வழக்கில் தொடர்புடைய சுடப்பட்ட வரும், அவரால் தாக்கப்பட்ட காவலரும், கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சிதம்பரம் அருகே வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவரின் வீட்டில் 10 பவுன் தங்க நகை உள்ளிட்ட பொருட்கள் கடந்த 18-ம் தேதி திருடு போயின. இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் வட்டம், நெல்லியார் கோணம் பகுதியைச் சேர்ந்த மைக்கேல் மகன் ஸ்டீபன் (38) என்பவரை நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். திருட பயன்படுத்தப்பட்ட பொருட்களை அண்ணாமலை நகர் அருகே உள்ள சித்தலாபாடி கிராம சாலையில் உள்ள பனைமரம் அருகே ஒரு முட்புதரில் மறைத்து வைத்திருப்பதாக ஸ்டீபன் தகவல் அளித்துள்ளார்.

….

Source: Hindu

Read More >> சிதம்பரம் அருகே காவலரை தாக்கிய திருடனை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த ஆய்வாளர்

Search

Back to Top