நிலத்தின் சந்தை மதிப்பை குறைக்க லஞ்சம்: டிஆர்ஓ, உடந்தையாக இருந்த பெண்ணுக்கு சிறை – சென்னை கோர்ட்
Uncategorized March 16, 2025,
நிலத்தின் சந்தை மதிப்பை குறைக்க லஞ்சம் வாங்கியதாக கைதான முத்திரைத் தீர்வை டிஆர்ஓ மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட பெண்ணுக்கு சிறை தண்டனை விதித்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை போரூர் சபரி நகர் பகுதியைச் சேர்ந்த சந்திரபாபு, தனது மனைவி பகுத்தறிவு பெயரில் காஞ்சிபுரம் மாவட்டம் பனங்காட்டூர் கிராமத் தில் ரூ. 20.46 லட்சம் மதிப்பில் 66 சென்ட் விவசாய நிலம் வாங்கியுள்ளார். இந்த நிலத்தை செங்கல்பட்டு சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். கடந்த 2013- 14 காலகட்டத்தில் இந்த நிலத்தின் சரியான சந்தை மதிப்புக்கு ஏற்ப, முத்திரை தீர்வை கட்டணத்தை நிர்ணயம் செய்ய சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்திரைத் தீர்வை டிஆர்ஓ-வாக பணிபுரிந்த மோகனசுந்தரத்திடம் (58) ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
….
Source: Hindu
Read More >> நிலத்தின் சந்தை மதிப்பை குறைக்க லஞ்சம்: டிஆர்ஓ, உடந்தையாக இருந்த பெண்ணுக்கு சிறை – சென்னை கோர்ட்