ரூ.5 கோடி கடன் தொல்லை; சென்னையில் மருத்துவர் குடும்பத்துடன் தற்கொலை – போலீஸ் விசாரணை

ரூ.5 கோடி கடன் தொல்லை; சென்னையில் மருத்துவர் குடும்பத்துடன் தற்கொலை – போலீஸ் விசாரணை

Uncategorized

சென்னை: சென்னை அண்ணாநகரில் ரூ.5 கோடி கடன் தொல்லையால், மருத்துவர் அவரது மனைவி மற்றும் அவர்களுடைய 2 மகன்கள் உட்பட 4 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையின்படி இது தற்கொலை என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து திருமங்கலம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் பாலமுருகன் (53). இவர் சென்னையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தார். கொளத்தூரில் இவருக்குச் சொந்தமாக வீடு உள்ளது. சென்னை அண்ணா நகரில் இரண்டு ஸ்கேன் சென்டர், செங்குன்றத்தில் இரண்டு ஸ்கேன் சென்டர் என நான்கு ஸ்கேன் சென்டர்களை நடத்தி வந்தார். தொழில் நிமித்தமாக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு குடியேறினார். இவரது மனைவி சுமதி உயர் நீதிமன்ற வழக்கறிஞர். குடும்ப வேலைப் பளுவால் சமீபகாலமாக நீதிமன்றத்துக்கு செல்வதில்லை என்று கூறப்படுகிறது.

….

Source: Hindu

Read More >> ரூ.5 கோடி கடன் தொல்லை; சென்னையில் மருத்துவர் குடும்பத்துடன் தற்கொலை – போலீஸ் விசாரணை

Search

Back to Top