கள்ளத் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு ‘பெல்’ அதிகாரி தற்கொலை – திருச்சியில் அதிர்ச்சி
Uncategorized March 12, 2025,
திருச்சி: 'பெல்' நிறுவன பொது மேலாளர் ஒருவர் தனது அலுவலகத்துக்குள் கள்ளத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத மிகுமின் நிறுவனம் (பெல்) செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிறுவனத்தில், பெல் கணேசபுரம் 8-வது தெருவை சேர்ந்த சண்முகம் (50), இணைப்பில்லா குழாய் வடிவமைப்பு (எஸ்எஸ்டிபி) பிரிவில் பொது மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பார்வதி இப்பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர்களது ஒரே மகள் பொறியியல் படித்து வருகிறார்.
….
Source: Hindu
Read More >> கள்ளத் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு ‘பெல்’ அதிகாரி தற்கொலை – திருச்சியில் அதிர்ச்சி