விருதுநகரில் மருதுசேனை மாநில நிர்வாகி கொலை; 15 பேர் மீது வழக்கு
Uncategorized July 27, 2023,
விருதுநகர்: விருதுநகரில் கும்பலால் வெட்டப்பட்ட மருதுசேனை அமைப்பின் மாநிலப் பொருளாளர் நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார். இதுதொடர்பாக 15 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
விருதுநகர் மேலரத வீதியைச் சேர்ந்தவர் குமரன் (56). நகராட்சி ஒப்பந்ததாரர். மருதுசேனை அமைப்பின் மாநிலப் பொருளாளராகவும் இருந்தார். நேற்று முன்தினம் மாலை விருதுநகர் மீன்மார்க்கெட் அருகே தனது அலுவலகத்தில் இருந்த குமரனை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது. தடுக்க முயன்ற உறவினர்கள் ராம்குமார் (33), மகாலிங்கம் மனைவி ரூபி(36) ஆகியோருக்கும் வெட்டு விழுந்தது. காயமடைந்த மூவரும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் குமரன் நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார்.
….
Source: Hindu
Read More >> விருதுநகரில் மருதுசேனை மாநில நிர்வாகி கொலை; 15 பேர் மீது வழக்கு