மதுரை அருகே கறிக்கடை வியாபாரி வீட்டில் பாட்டில் குண்டு வீசியதாக சிறுவன் உட்பட 3 பேர் கைது

மதுரை அருகே கறிக்கடை வியாபாரி வீட்டில் பாட்டில் குண்டு வீசியதாக சிறுவன் உட்பட 3 பேர் கைது

Uncategorized

மதுரை: மதுரை அருகே கறிக்கடை வியாபாரியின் வீட்டில் பாட்டில் குண்டு வீசியதாக சிறுவன் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், திருவாதவூரைச் சேர்ந்தவர் ராஜா முகமது. அதே ஊரில் கறிக்கடை நடத்துகிறார். நேற்று இரவு வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் வீட்டுக்கு வெளியில் திடீரென பயங்கர வெடிச் சத்தம் கேட்டது. ராஜா முகமது எழுந்து பார்த்தபோது, வீட்டின் ஜன்னல் திரைச்சீலை தீயிட்டு எரிந்தது. அவரது வீட்டின் மீது பாட்டில் குண்டுகள் வீசியிருப்பது தெரிந்தது. இது பற்றி மேலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

….

Source: Hindu

Read More >> மதுரை அருகே கறிக்கடை வியாபாரி வீட்டில் பாட்டில் குண்டு வீசியதாக சிறுவன் உட்பட 3 பேர் கைது

Search

Back to Top