கோவை நீதிமன்ற வளாகத்தில் மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவர் கைது
Uncategorized March 24, 2023,
கோவை: கோவை நீதிமன்ற வளாகத்தில், வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த மனைவி மீது, ஆசிட் ஊற்றிய கணவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள கண்ணம்பாளையம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார்(42). ஆம்புலன்ஸ் ஓட்டுநர். இவரது மனைவி கவிதா (35). இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர், மனைவி மீது திருட்டு வழக்குகள் உள்ளன. கடந்த 2016-ம் ஆண்டு கோவையில் பேருந்தில் பெண் பயணியிடம் நகை திருடியதாக கவிதா மீது ஆர்.எஸ்.புரம் போலீஸில் வழக்கு உள்ளது. இதில் அப்போது கைது செய்யப்பட்ட கவிதா பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இவ்வழக்கு விசாரணை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜே.எம்.1 நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
….
Source: Hindu
Read More >> கோவை நீதிமன்ற வளாகத்தில் மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவர் கைது