மூதாட்டிகளை கொன்று, உடலுறவு கொண்ட சைக்கோ சீரியல் கில்லர் கைது
Uncategorized March 23, 2023,

உத்தரபிரதேச மாநிலத்தில் மூதாட்டிகளை கொன்று, உடலுறவு கொண்ட சைக்கோ சீரியல் கில்லரை போலீஸார் இன்று கைது செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
இங்குள்ள பாராபங்கி மாவட்டத்திலுள்ள கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பு, மூதாட்டிகளை தொடர்ந்து கொலை செய்து, பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் சம்பவம் நடந்தன.
இந்தக் கொலைகள் பற்றி, போலீஸார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளியை தேடி வந்தனர். இந்த நிலையில், அந்தக் குற்றவாளியின் புகைப்படத்தை இன்று போலீஸார் சமூக வலைதளத்தில் வெளியிட்டு, இதுபற்றி தெரிந்தால் கூறலாம் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஹூன்ஹூனா கிராமத்தில், கடந்த ஜனவரி 22ஆம் தேதி மூதாட்டி ஒருவரை கொல்ல முயன்ற 2 பேரை கிரராமத்தினர் பிடிக்க முயன்று, அமரேந்தர் என்பவனை பிடித்தனர். இதில், அவந்து கூட்டாளி சுரேந்தர் தப்பியோடிவிட்டான்.
இந்த நிலையில், மூதாட்டடிகளை கொன்று, சடலங்களுடன் உடலுறவு கொண்ட குற்ற சம்பவத்தில் தொடர்புடைய சுரேந்தரை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து, போலீஸார் தீவிர விசாரணை செய்துவருகின்றனர்.
….
Source: Webduniya
Read More >> மூதாட்டிகளை கொன்று, உடலுறவு கொண்ட சைக்கோ சீரியல் கில்லர் கைது