கிருஷ்ணகிரி ஜெகன் கொலை: சேலம் நீதிமன்றத்தில் மேலும் இருவர் சரண்
Uncategorized March 23, 2023,
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் இன்று (23-ம் தேதி) சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
கிருஷ்ணகிரியை அடுத்த கிட்டம்பட்டியை சேர்ந்த டைல்ஸ் ஓட்டும் தொழிலாளி ஜெகன் (25). இவர் அவதானப்பட்டியை அடுத்த புழுக்கான் கொட்டாயை சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சரண்யா(21) காதலித்து வந்தார். இருவரும் உறவினர்கள். இந்த காதலுக்கு சரண்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை மீறி சரண்யா கடந்த ஜனவரி 26-ம் தேதி ஜெகனை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த 21-ம் தேதி அவரது மாமனார் சங்கர் (43) உட்பட சிலர் சேர்ந்து கிருஷ்ணகிரி அணை பிரிவு சாலையில் ஜெகனை வெட்டிக் கொலை செய்தனர்.
….
Source: Hindu
Read More >> கிருஷ்ணகிரி ஜெகன் கொலை: சேலம் நீதிமன்றத்தில் மேலும் இருவர் சரண்