ஹோலி கொண்டாட்டத்தின்போது வெளிநாட்டுப் பெண்ணுக்கு துன்புறுத்தல் – சிறுவன் உட்பட 3 பேர் கைது
Uncategorized March 11, 2023,
புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது ஜப்பானைச் சேர்ந்த பெண்ணைத் துன்புறுத்திய விவகாரத்தில் சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டெல்லி போலீஸார் வெளியிடுள்ள அறிக்கையில், "அதிகாரிகள் மற்றும் உளவுத்துறையினரின் தீவிர முயற்சிக்கு பின்னர் வீடியோவில் உள்ள சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஒரு சிறுவன் உட்பட மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், வீடியோவில் இருக்கும் சம்பவத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்திலோ, ஜப்பான் தூதரகத்திலோ புகார் ஏதும் தெரிவிக்காத நிலையில், வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டிருப்பவர்களின் மீது டெல்லி போலீஸ் சட்டப்படியான நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் புகார் ஏதும் கொடுத்திருந்தால் அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
….
Source: Hindu
Read More >> ஹோலி கொண்டாட்டத்தின்போது வெளிநாட்டுப் பெண்ணுக்கு துன்புறுத்தல் – சிறுவன் உட்பட 3 பேர் கைது