பேக்கரியில் மாமூல் கேட்டு மிரட்டிய இருவருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை: புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவு
Uncategorized March 10, 2023,
புதுச்சேரி: பேக்கரியில் மாமூல் கேட்ட வழக்கில் 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிபதி தீர்ப்பு அளித்தார். இவ்வழக்கில் முக்கிய ஆதாரமாக சிசிடிவி விளங்கியுள்ளது.
புதுச்சேரி காந்தி வீதியில் பேக்கரி வைத்திருப்பவர் சண்முக சுந்தரம். இவரது கடைக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் புதுச்சேரி வைத்தி குப்பத்தைச் சேர்ந்த எலி கார்த்திக் (எ) கார்த்திகேயன் (30), வாணரப்பேட்டையைச் சேர்ந்த மதி (எ) மணிகண்டன் (29) ஆகியோர் வந்து மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். மாமூல் தர மறுத்ததால் பொருள்களை சூறையாடினர். அதைத் தடுத்த கடை ஊழியர் சிவா (எ) சிவராஜைத் தாக்கியதுடன், உரிமையாளரை மிரட்டியுள்ளனர். இதில் காயமடைந்த சிவா, சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார்.
….
Source: Hindu
Read More >> பேக்கரியில் மாமூல் கேட்டு மிரட்டிய இருவருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை: புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவு