‘மக்கும் பிளாஸ்டிக்’ பெயரில் மோசடி விற்பனை – கவனிக்குமா தமிழக அரசு? 

‘மக்கும் பிளாஸ்டிக்’ பெயரில் மோசடி விற்பனை – கவனிக்குமா தமிழக அரசு? 

tami nadu

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், மக்கக்கூடிய பிளாஸ்டிக் என்ற பெயரில் புழக்கத்துக்கு வந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்தது. அதன்படி ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தடை விதிக்கப்பட்ட காலங்களில் அரசின் உத்தரவு தீவிரமாக பின்பற்றப்பட்டது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல உத்தரவு நீர்த்துப்போனது. வழக்கம் போல் பிளாஸ்டிக் பொருட்கள் கிடைக்கத்தொடங்கின. 

இதனிடையே தமிழக அரசின் இந்தத் தடை உத்தரவுக்கு எதிராக பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்த அரசாணை செல்லும் என உத்தரவிட்டது. மீண்டும் அரசு பிளாஸ்டிக் தடையை தீவிரமாக்கியது. பிளாஸ்டிக் பயன்படுத்துவோரின் அபராதம் அதிகரிக்கப்பட்டது. 

இந்நிலையில் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், மக்கக்கூடிய பிளாஸ்டிக் என்ற பெயரில் புழக்கத்துக்கு வந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

சாலையோர உணவகங்கள், சிறு உணவகங்களில் இத்தகைய பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாகவும், அவை மக்கும் தன்மையுடைய பிளாஸ்டிக் என்ற பெயரில் விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மக்கும் தன்மையுடையது தானா? என்பதை சோதிக்கக்கூடிய தொழில்நுட்பங்கள் இல்லாததால் பெரும்பாலான சிறு உணவ‌கங்களில், ஒரேமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய இத்தகைய பிளாஸ்டிக் பொருட்கள் நூதன முறையில் புழக்கத்துக்கு வந்துள்ளன. 

சென்னையில் மட்டும் இதுவரை 260 டன் அளவுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> ‘மக்கும் பிளாஸ்டிக்’ பெயரில் மோசடி விற்பனை – கவனிக்குமா தமிழக அரசு? 

Search

Back to Top