சேலம் எம்பி எஸ்.ஆர் பார்த்திபன் மீது வழக்கு
tami nadu July 12, 2019,
வனச்சரக அலுவலரை மிரட்டியதாக சேலம் எம்பி எஸ்.ஆர் பார்த்திபன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் சேலம் தொகுதியில் போட்டியிட்ட எஸ்.ஆர்.பார்த்திபன் வெற்றி பெற்று எம்.பி ஆனார். இந்நிலையில் வனக்காவலர்களை மிரட்டியதாக எம்.பி பார்த்திபன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வனச்சரகர் திருமுருகன் அளித்த புகாரின் பேரில் பார்த்திபன் மற்றும் அவரது சகோதரர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தன் மீது அவப்பெயரை உண்டாக்கவே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக பார்த்திபன் விளக்கமளித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> சேலம் எம்பி எஸ்.ஆர் பார்த்திபன் மீது வழக்கு