11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரும் வழக்கு இன்று விசாரணை 

11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரும் வழக்கு இன்று விசாரணை 

tami nadu

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக கொறடா சக்கரபாணி‌, தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளதாக திமுக மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் சார்பில் முறையீடு செய்யப்பட்டது. 

திமுக மற்றும் தங்க தமிழ்ச்செல்வனின் கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஏ.கே.சிக்ரி பணி ஓய்வு பெற்றதால், நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்தார். இந்நிலையில், 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரும் வழக்கை புதிய அமர்வு இன்று விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரும் வழக்கு இன்று விசாரணை 

Search

Back to Top