மேல்நிலைப் பள்ளி இல்லாத மலைகிராமம் – கிருஷ்ணகிரி சோகம்

மேல்நிலைப் பள்ளி இல்லாத மலைகிராமம் – கிருஷ்ணகிரி சோகம்

tami nadu

கிருஷ்ணகிரி மாவட்டம் மஞ்சுகொண்டபள்ளியில் உள்ள மலைகிராமங்களில் மேல்நிலைப் பள்ளி இல்லாததால் பெண்குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.

மஞ்சுகொண்டபள்ளி, கிருஷ்ணகிரி தாய் தந்தை இல்லாத அர்பிதாவிற்கு அவரது தாத்தாவும், பாட்டியும்தான் அரவணைப்பு. பேல்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்புவரை பயின்றார். தனது கிராமத்தில் உயர்நிலைப்பள்ளி இல்லாததால் 75 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தேன்கனிக்கோட்டை அரசுப் பள்ளியில் விடுதியில் தங்கி 9ஆம் வகுப்புப் படிக்க உள்ளார்.

இதுகுறித்து “அர்பிதாவுடன் பயின்ற மேலும் சில மாணவிகளும் விடுதியில் தங்கிப் படிக்கச் செல்கின்றனர். ஆனால், 11,12ஆம் வகுப்புகளை படிப்போமா எனத் தெரியவில்லை. 2016-17ஆம் ஆண்டுவரை நடுநிலைப் பள்ளிக் கூட இல்லாத இக்கிராமங்களில் 5ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திய பல பெண் குழந்தைகள் இருப்பதாக” என மற்ற மாணவிகள் தெரிவிக்கின்றனர்.

ப்ளஸ் 2விற்குப் பிறகு என்ன படிக்கலாம் எனக் குழம்பும் மாணவிகளே அதிகம். ஆனால், 11,12ஆம் வகுப்பே பயில்வோமா எனத் தெரியாமல் தவிக்கும் இப்படியான மலைகிராம மாணவிகளும் இதே தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> மேல்நிலைப் பள்ளி இல்லாத மலைகிராமம் – கிருஷ்ணகிரி சோகம்

Search

Back to Top