தாம்பரம் அருகே தீ விபத்து… 3 பேர் உயிரிழப்பு..!
tami nadu June 27, 2019,
சென்னை தாம்பரம் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
சென்னை தாம்பரம் அருகே சேலையூரில் நள்ளிரவில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பூஜை அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் அவர்கள் உயிரிழந்ததாக தெரிகிறது. வீட்டில் இருந்து அதிகப்படியான புகை வெளியேறியதை அடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயற்சித்து வருகின்றனர்.

அதற்குள் தீயில் சிக்கிய 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இரண்டு பெண்கள் மற்றும் மற்றும் ஒரு ஆண் அடங்குவர் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> தாம்பரம் அருகே தீ விபத்து… 3 பேர் உயிரிழப்பு..!