குட்டிகளை முதுகில் சுமந்தபடி சாலையை கடந்த கரடி – வீடியோ

குட்டிகளை முதுகில் சுமந்தபடி சாலையை கடந்த கரடி – வீடியோ

tami nadu

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து அரவேணு செல்லும் சாலையில் இரண்டு குட்டிகளை முதுகில் சுமந்து சாலையில் செல்லும் கரடியை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் இருந்து சமீபகாலமாக வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவை தேடி நகரம் மற்றும் கிராம பகுதிகளுக்கு கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கியுள்ளன. வனத்துறையினர் வன விலங்குகளை காட்டுக்குள் துரத்தி விட்டாலும் மீண்டும் மீண்டும் அவைகள் வந்து விடுகின்றன. 

இந்நிலையில் குன்னூரில் இருந்து அரவேணு செல்லும் சாலையில் 'அளக்கரை பெந்தன்' பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் இரண்டு குட்டிகளை முதுகில் சுமந்த தாய் கரடி ஒன்று வெகு நேரம் அங்கேயே சுற்றித்திரிந்தது. பின்னர் குட்டிகளை முதுகில் சுமந்தவாறு சாலையை கடந்து சென்றது. அந்தவழியாக வாகனங்களில் வந்த சுற்றுலா பயணிகள் கரடி சாலையை கடக்கும் வரை வாகனங்களை நிறுத்தி வழி விட்டனர் இந்த காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் தங்கள் செல்போனில் கரடியை படம் பிடித்து மகிழ்ந்தனர்.

வீடியோ:

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> குட்டிகளை முதுகில் சுமந்தபடி சாலையை கடந்த கரடி – வீடியோ

Search

Back to Top