தமிழகத்தில் இன்றும் மழை – வானிலை ஆய்வு மையம் 

தமிழகத்தில் இன்றும் மழை – வானிலை ஆய்வு மையம் 

tami nadu

தமிழகத்தில் நேற்று சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ள நிலையில், இன்றும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், அம்பத்தூர், வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் இ‌ரண்டு மணி நேரம் இடைவிடாமல் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. 

தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் மக்கள் வீட்டின் மொட்டை மாடிகளிலும், வீதிகளிலும் குடம், பாத்திரங்களை வைத்து மழைநீரை சேகரித்தனர். இதேபோல் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. புதுச்சேரியில் சூறாவளி காற்று, இடியுடன் கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. 

திடீரென பெய்த மழையால் வெப்பம் தனிந்து குளிச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதற்கிடையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் திங்கட்கிழமையும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் சென்னை, தஞ்சாவூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரையில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> தமிழகத்தில் இன்றும் மழை – வானிலை ஆய்வு மையம் 

Search

Back to Top