தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை!

tami nadu

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று கோடை மழை பெய்தது. இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெயில் வாட்டி வருகிறது. வறட்சி காரணமாக சென்னை உட்பட பல பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெயிலின் வெப்பத்தை குறைக்கும் விதமாக தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று கோடை மழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நெய்க்காரப்பட்டி, கீரனூர், பாலசமுத்திரம், ஆயக்குடி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீரென பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

நாகை மாவட்டம் திருமருகல் உள்ளிட்ட பகுதியில் மிதமான மழை பெய்தது. அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில்,‌ 30 நிமிடங்கள் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

காவிரி டெல்டா பகுதியான திருவாரூரில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்த‌னர். கங்களாஞ்சேரி, ஆண்டிப்பந்தல், சண்ணாநல்லூர், கீழப்பனங்குடி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. காலை முதல்‌ வெயில் சுட்டெரித்த நிலையில், மாலையில் மழை பெய்தது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

தமிழகத்தில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை!

Search

Back to Top