பல மணி நேரமாக வீணான குடிநீர்: மக்கள் ஆதங்கம்

பல மணி நேரமாக வீணான குடிநீர்: மக்கள் ஆதங்கம்

tami nadu

தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் சூழ்நிலையில் சேலத்தில் உள்ள ஐந்து ரோடு பகுதியில் அதிகப்படியான குடிநீர் வீணான சம்பவமும் நடந்துள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குடிதண்ணீருக்காக மக்கள் தெருத்தெருவாக குடங்களை தூக்கிக் கொண்டு அலைகின்றனர். தண்ணீர் லாரியும் பல இடங்களில் வராமல் இருப்பதால், மக்கள் தண்ணீருக்கு என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் சேலத்தில் உள்ள ஐந்து ரோடு பகுதியில் அதிகப்படியான குடிநீர் வீணான சம்பவம் தமிழக மக்களை ஆத்திரமடையச் செய்துள்ளது. ஐந்து ரோடு பகுதியில் பாலம் கட்டும் பணிக்காக குடிநீர் குழாயிலிருந்த மொத்த குடிநீரும் வெளியேற்றப்பட்டது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில் குழாயிலிருந்த குடிநீரை முறையாக‌ பயன்படுத்தியிருக்கலாம் என ஆதங்கம் தெரிவித்தனர்‌. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, பராமரிப்பு பணிக்காக திறக்கப்பட்ட தண்ணீருக்கு மாற்று ஏற்பாடு செய்யமுடியாது என விளக்கமளித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> பல மணி நேரமாக வீணான குடிநீர்: மக்கள் ஆதங்கம்

Search

Back to Top