சென்னையில் தண்ணீர் கேனை திருடும் நபர்…! – வீடியோ

சென்னையில் தண்ணீர் கேனை திருடும் நபர்…! – வீடியோ

tami nadu

தமிழகத்தின் பல பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடும் நிலையில், சென்னையில் ஒருவர் குடிநீர் கேனை திருடும் சம்பவம் நடந்துள்ளது.

இந்தாண்டு தமிழகத்தில் பருவமழை பொய்த்துபோனதால் கோடை காலத்தில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. சென்னையின் பல பகுதிகளில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தண்ணீருக்கான போராட்டங்களும் பல இடங்களில் தொடங்கியுள்ளது. பல இடங்களில் பெண்கள் குடத்துடன் தண்ணீருக்காக அலையும் காட்சிகளாகத்தான் இருக்கிறது. பெண்கள் சாலை மறியலில் ஈடுபடும் நிலையும் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் குடிதண்ணீரை திருடும் சம்பவமும் சென்னையில் நடந்துள்ளது. சூளைமேடு அண்ணா நெடும்பாதையில் உள்ள தனியார் ஹோட்டல் முன்பு குடிப்பதற்காக வைக்கப்பட்ட தண்ணீர் கேனை, கடந்த 7-ம்தேதி அடையாளம் தெரியாத ஒருவர் திருடி சென்று, ஆட்டோவில் ஏற்றிச் செல்லும் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்யும்போது, அதிகாலை 4 மணி அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது தெரிய வந்தது. இதுவரை சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை. ஆனால் அந்த நபர் சூளைமேடு பகுதியில் இது போன்று தண்ணீர் கேன்களை தொடர்ந்து திருடும் சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> சென்னையில் தண்ணீர் கேனை திருடும் நபர்…! – வீடியோ

Search

Back to Top