உள்ளாட்சித் தேர்தலை தற்போது நடத்த இயலாது: தமிழக அரசு

உள்ளாட்சித் தேர்தலை தற்போது நடத்த இயலாது: தமிழக அரசு

tami nadu

வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியிருப்பதால், தற்போதைக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் உடனடியாக நடத்தக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு, புதிய பிரமாண பத்திரம் ஒன்றை இன்று தாக்கல் செய்தது. அதில், தற்போது மக்களவைத் தேர்தல் நடந்துவருவதால் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான வாக்காளர் பட்டியலை சரிபார்க்க, மாநில தேர்தல் ஆணையத்திடம் ஆட்களும் நேரமும் இல்லை. இதனால் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த முடியவில்லை’ என்று தெரிவித்துள்ளது.

தேர்தல் நடத்தப்படாததால், உள்ளாட்சி அமைப்புகள் சரியாக செயல்படாமல் இருப்பதாகக் கூறப்படுவதை மறுத்துள்ள தமிழக அரசு, தூய்மை காவலர்கள் மூலமாக தமிழகம் முழுவதும் அனைத்து பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள் ளார் என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பல பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்துள்ளது. இதற்கு முன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், தொகுதி பங்கீடு காரணமாக உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை என்று தெரிவித்திருந் தது. இப்போது மக்களவை தேர்தலை காரணம் காட்டி, தேர்தலை நடத்த முடியவில்லை என்று தெரிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> உள்ளாட்சித் தேர்தலை தற்போது நடத்த இயலாது: தமிழக அரசு

Search

Back to Top