திமுகவிற்கு எதிரான குறுஞ்செய்தி குறித்து ஏர்டெல் விளக்கம்
tami nadu April 8, 2019,
வரும் தேர்தலில் ‘திமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம்’ என சில மொபைல் பயனாளர்களுக்கு குறுஞ்செய்தி வந்தது தொடர்பாக ஏர்டெல் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்தவர்களின் மொபைல் எண்ணிற்கு அண்மையில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் ‘இந்து மதத்தை இழிவுபடுத்தி வாக்கு கேட்கும் திமுகவிற்கு வாக்களிக்காதீர்கள்” என இருந்துள்ளது. இந்தக் குறுஞ்செய்தி ‘Bz-Alerts’ என்னும் ஏர்டெல் அலர்ட் கோடுடனும் வந்துள்ளது.
இந்தக் குறுஞ்செய்தியை பார்த்து அதிர்ச்சியடைந்த கேளம்பாக்கத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர், தேர்தல் ஆணையத்தின் ஆன்லைன் போர்டு வழியாக இதுகுறித்து புகார் தெரிவித்தார். ஏர்டெல் இதுபோன்ற அபத்தமான குறுஞ்செய்தி அனுப்பதை தம்மால் நம்ப முடியவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்தக் குறுஞ்செய்தியை தங்கள் நிறுவனம் அனுப்பவில்லை என ஏர்டெல் நெட்வொர்க்கும் மறுத்துள்ளது. இதுதொடர்பாக ஏர்டெல் நிறுவனம் மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது. ஏர்டெல் பெயரை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர்கள் மோசமான வேலைகளில் ஈடுபடுவதாக அந்த நிறுவனம் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனம் இந்தக் குறுஞ்செய்தியை அனுப்பியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எந்தவொரு அரசியல் கட்சியாவது இதுபோன்ற குறுஞ்செய்தியை அனுப்ப அந்த கம்பெனியை வேலைக்கு அமர்த்தியிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனிடையே இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> திமுகவிற்கு எதிரான குறுஞ்செய்தி குறித்து ஏர்டெல் விளக்கம்