“தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை” – கமல்ஹாசன் விமர்சனம்
tami nadu April 8, 2019,
தமிழகத்தில் சிஸ்டம் கெட்டுப் போய்விட்டது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவை அவிநாசி சாலையில் இன்று கோவை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட கமல்ஹாசன், செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது, கேள்வி கேட்கவில்லை என்ற ஒரே காரணத்தால் தமிழகத்தில் சிஸ்டம் கெட்டுப் போய்விட்டதாகக் கூறினார். தமிழகத்தில் திட்டங்களைச் செயல்படுத்துவது சாத்தியம் என்ற நமபிக்கையே போய் விட்டதாகவும், ஆட்சியாளர்களிடம் தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் எனவும் கமல் தெரிவித்தார்.
மத்தியில் இந்த முறை பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே இழுபறி நிலவ வாய்ப்புள்ளதாகவும், எனவே மூன்றாவது அணி அமையும் என நாடெங்கும் உள்ள தலைவர்கள் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே உள்ள அரசியல் சூழல்தான் தன்னை கோபத்திற்கு ஆளாக்கி அரசியலில் களமிறங்கச் செய்ததாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பிக்கு தமிழகம் அல்ல இந்தியா முழுவதும் இருந்து ஆதரவு கிடைக்கும் என்று கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> “தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை” – கமல்ஹாசன் விமர்சனம்