“கருணாநிதியை வீட்டுச்சிறை வைத்தவர் ஸ்டாலின்” – முதலமைச்சர் பழனிசாமி

“கருணாநிதியை வீட்டுச்சிறை வைத்தவர் ஸ்டாலின்” – முதலமைச்சர் பழனிசாமி

tami nadu

சுயநலத்திற்காக தந்தையையே 2 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்தவர் திமுக தலைவர் ஸ்டாலின் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 

நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து குன்னூர், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் பழனிசாமி இன்று வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், கருணாநிதி நன்றாக இருந்தால், தான் தலைவராக முடியாது என எண்ணி, அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் 2 ஆண்டுகள் வீட்டிலேயே ஸ்டாலின் சிறை வைத்திருந்ததாக குற்றம்சாட்டினார். அதுமட்டுமின்றி, கருணாநிதியை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்‌றிருந்தால் குணமாகியிருப்பார் என்று தெரிவித்தார். 

அத்துடன், ஒரு முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில் இதுதொடர்பாக விசாரிக்கப்படும் எ‌னவும் அவர் கூறினார். மேலும், நீலகிரியில் திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் ஆ.ராசாவை, 2ஜி ஊழல் வழக்கில் சிறைக்குச் சென்றவர் என்று கடுமையாக சாடினார். இந்த வழக்கில் சிபிஐ மேல்முறையீடு செய்திருப்பதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், விசாரணையின் முடிவில் தண்டனை கிடைக்கும் என்றும் கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> “கருணாநிதியை வீட்டுச்சிறை வைத்தவர் ஸ்டாலின்” – முதலமைச்சர் பழனிசாமி

Search

Back to Top