கோவை மாணவி கொடூரக் கொலையில் ஒருவர் கைது

கோவை மாணவி கொடூரக் கொலையில் ஒருவர் கைது

tami nadu

கோவையில் கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கோவையில் தனியார் கல்லூரியில் பயின்று வந்த 20 வயது மாணவி காணாமல் போனதாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், பொள்ளாச்சி தாராபுரம் சாலையில் இளம்பெண் ஒருவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற காவலர்கள், முட்புதருக்குள் இருந்த பெண்ணின் உடலை மீட்டனர். 

விசாரணையில் அவர், கல்லூரியில் இருந்து காணாமல் போன மாணவி என தெரியவந்தது. அவரது உடலில் இருந்து நகைகள் எதுவும் திருடப்படவில்லை என்பதால், அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். 

கொடூரமாக கொல்லப்பட்ட அந்த பெண்ணுக்கு, அடுத்த மாதம் திருமண நிச்சயம் நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கல்லூரியில் இருந்து வெளியே வந்த அவரை அடையாளம் தெரியாத இருவர் பின் தொடர்ந்து சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரித்து வந்தனர். அப்பெண்ணின் செல்போன் சிக்னலை வைத்தும் ஆய்வு நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்தக் கொலை தொடர்பாக இரண்டு பேர் சிக்கியதாகக் கூறப்பட்டது சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்ப டையில் அவர்கள் பிடிபட்டதாகவும் முக்கிய குற்றவாளி சிக்கிவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் சதீஷ் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.  அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> கோவை மாணவி கொடூரக் கொலையில் ஒருவர் கைது

Search

Back to Top