மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை ! போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது
tami nadu April 2, 2019,
காஞ்சிபுரத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்
காஞ்சிபுரத்தை சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் விஷ்னுகாஞ்சி போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் சாலையின் மறைவான பகுதியில் அந்த சிறுமி மயங்கிய நிலையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அரசு மருத்துவமனையில் சிறுமியை பரிசோதனை செய்ததில், அவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, ராஜா ,தேவா மற்றும் தினேஷ் ஆகியோர் ஆட்டோவில் கொண்டுவந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து, தினேஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜா மற்றும் தேவாவை கைது செய்தனர். தலைமறைவானா தினேஷை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை ! போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது