பொள்ளாச்சியில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்
tami nadu April 2, 2019,
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் 1 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ராஜவீதி பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர் . அப்போது அவ்வழியாக வந்த காரை பரிசோதனை செய்தபோது 1 கிலோ அளவிலான தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியபோது தனியாருக்கு சொந்தமான நகைக்கடை ஒன்றிற்கான நகை எனத் தெரியவந்தது.

இதனையடுத்து கார் ஒட்டுனர் வீரய்யன் மற்றும் கடை ஊழியர் நித்தின் ஆகியோரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது நகை செய்யும் இடத்திலிருந்து நகைகளை கொண்டு செல்வதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்பின்னர் இதுகுறித்து வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> பொள்ளாச்சியில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்