தேர்தல் செலவுக்காக ஆதார், பாஸ்போர்ட் அடமானம் ? : வேட்பாளரின் நிலை
tami nadu April 2, 2019,
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர், தேர்தல் செலவுக்காக ஆதார் மற்றும் பாஸ்போர்ட்டை அடமானம் வைத்துக் கடன் வழங்கக் கோரி வங்கியில் மனு கொடுத்துள்ளார்.
நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கு அகிம்சா சோசலிஸ்ட் கட்சியின் சார்பில் ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார். இவர் தனது தேர்தல் செலவினத்திற்காக போதிய பணம் இல்லாத நிலையில், தனது ஆதார் அட்டை மற்றும் கடவுசீட்டை அடமானமாக வைத்து கொண்டு 50 லட்சம் கடன் வழங்க கோரி கோரிக்கை விடுத்துள்ளார். இதற்காக காந்தி வேடமிட்டு நாமக்கல் பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு வந்த அவர் மனுவும் அளித்தார்.
கடன் பிரிவு மேலாளரிடம் மனு அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ரமேஷ், “"தேர்தல் செலவிற்கான பணம் என்னிடமில்லை. வங்கியில் கடன் வழங்குமாறு கோரியிருக்கிறேன்” என்று கூறினார். மேலும், தனது மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக வங்கி அதிகாரிகள் கூறியுள்ளதாக தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> தேர்தல் செலவுக்காக ஆதார், பாஸ்போர்ட் அடமானம் ? : வேட்பாளரின் நிலை