"திருமாவளவனுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது"- தமிழக அரசு தகவல்

"திருமாவளவனுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது"- தமிழக அரசு தகவல்

tami nadu

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

2016-ஆம் ஆண்டு தேர்தல் நேரத்திலிருந்து தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தனிப்பட்ட காவலரை நியமிக்க கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, திருமாவளவன் பயணிக்கும் இடங்களில், ஒரு டி.எஸ்.பி. மற்றும் 10 காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவதாகவும், பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளும் போது ஒரு டி.எஸ்.பி மற்றும் நான்கு இன்ஸ்பெக்டர், காவலர்கள் பாதுகாப்பில் இருப்பதாகவும், இதே போன்று அவர் தங்கும் ஊர்களில் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்‌கப்பட்டது.

அதனை ஏற்க மறுத்த மனுதாரர், பொதுவான பாதுகாப்பை தவிர 24 மணி நேரமும் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியை நியமிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தனிப்பட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை யாரும் உரிமை கோர முடியாது என்றும் பாதுகாப்பு கோரும் மனுக்களை டிஜிபி அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு ஆய்வு குழு தான் முடிவெடுக்கும் என நீதிபதி தெரிவித்தார். பின்னர் திருமாவளவனுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு விவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஒத்திவைத்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> "திருமாவளவனுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது"- தமிழக அரசு தகவல்

Search

Back to Top