தண்ணீர் குடிக்க வந்தபோது பரிதாபம் : பள்ளத்தில் சிக்கிய குட்டி யானை
tami nadu March 24, 2019,
ஈரோடு வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் தண்ணீர் குடிக்க வந்த குட்டி யானை பள்ளத்தில் சிக்கியது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் பகுதியில் யானைகள் அவ்வப்போது வந்து தண்ணீர் குடித்து செல்கின்றன. கோடைக்காலம் என்பதால் தண்ணீரின்றி காணப்படுவதால் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் வரட்டுப்பள்ளம் பகுதியில் தண்ணீர் குடிக்க வந்த நான்கு மாதமே ஆன குட்டியானை வாய்க்காலில் சிக்கிக்கொண்டது.
குட்டியை தூக்க தாய் யானை முயற்சி செய்தும், குட்டி மேலே வரமுடியாமல் தவித்தது. இதையடுத்து யானை சிக்கிக்கொண்டது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரோந்துபணியில் ஈடுபட்டிருந்த அந்தியூர் வனச்சரகர் பாலகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஊர் மக்கள் உதவியுடன் குட்டியானையை மீட்டனர். மீட்கப்பட்ட குட்டியானை பள்ளத்திலிருந்து வெளிவந்தவுடன் கிராம மக்களை துரத்தியதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> தண்ணீர் குடிக்க வந்தபோது பரிதாபம் : பள்ளத்தில் சிக்கிய குட்டி யானை