அதிமுக கூடுதல் தேர்தல் அறிக்கை – உடனடி நதிகள் இணைப்பு திட்டம்

அதிமுக கூடுதல் தேர்தல் அறிக்கை – உடனடி நதிகள் இணைப்பு திட்டம்

tami nadu

நாடாளுமன்ற தேர்தலுக்கான கூடுதல் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை அதிமுக வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுக ஏற்கனவே தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது கூடுதல் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஈழத் த‌மிழினப் படுகொ‌லைக்கு அன்றைய திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியாளர்கள் காரணம் என்றும், அவர்கள் மீது ஐநா சபையும், சர்வதேச நாடுகளும், இந்திய அரசாங்கமும் உரிய சட்ட நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க ‌அதிமுக வலியுறுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஈழத்தமிழரின் கோரிக்கைகள் குறித்து வாக்கெடுப்பு நடத்த, இந்திய அரசையும், ஐக்கிய நாடுகள் அமைப்பையும், ஏனைய பன்னாட்டு அமைப்புகளையும் அதிமுக வலியுறுத்தும் என அறிக்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏழு தமிழர்களை விடுவிப்பதற்கு மத்திய அரசிடமும், குடியரசுத் தலைவ‌ரிடமும் வலியுறுத்தப்படும் என அதிமுக தெரிவித்துள்ளது. காவிரி – கோதாவரி நதிகள் இணைப்புத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும் கூடுதல் தேர்தல் அறிக்கையில் அதிமுக உறுதி அளித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> அதிமுக கூடுதல் தேர்தல் அறிக்கை – உடனடி நதிகள் இணைப்பு திட்டம்

Search

Back to Top