ஏழை குடும்பத்திற்கு உதவிய ஆட்சியர் கந்தசாமிக்கு குவியும் பாராட்டுகள்
tami nadu December 15, 2018,
திருவண்ணாமலையில் ஏழை குடும்பத்திற்கு பசுமை வீடு திட்டம் மூலம் வீடு தந்து அவர்களது மகளின் படிப்பை செலவையும் ஏற்றுள்ள மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த உடையார்குப்பம் கிராமத்தை சேர்ந்த மாணவி காமாட்சி. அவரின் தாயார் வள்ளி விபத்தில் சிக்கி கோமாவில் இருந்துள்ளார். தற்போது கோமாவில் இருந்து அவர் மீண்டுள்ளார். கோமாவில் இருந்து மீண்ட தன் தாய்க்கு முதியோர் உதவித்தொகை கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க மாணவி காமாட்சி சென்றுள்ளார். அப்போது மாவட்ட ஆட்சியரிடம் குடும்ப நிலையை தெரிவித்த மாணவி வறுமையின் காரணமாக மேல்படிப்பு படிக்க முடியவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அந்த மாணவியை அரசு கல்லூரியில் பிஎட் படிப்பு படிக்க அனைத்து ஏற்பாடுகளையும் ஆட்சியர் கந்தசாமி செய்துள்ளார். பின்னர் அவர்களின் குடும்ப சூழ்நிலையை கருதி பசுமை வீடு திட்டத்தின் மூலம் புதிய வீட்டையும் கொடுத்துள்ளார். மேலும் அவர் படித்து முடிக்க ஆகும் செலவு தொகையினையும் காசோலையாக அந்த மாணவியிடம் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அளித்துள்ளார். இதற்கிடையில் மாணவியின் வீட்டிற்கு சென்று அவருடன் அமர்ந்து ஆட்சியர் உணவருந்தியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> ஏழை குடும்பத்திற்கு உதவிய ஆட்சியர் கந்தசாமிக்கு குவியும் பாராட்டுகள்