“குணமா சொல்லனும்” – திறமையான சுட்டிப்பெண்ணின் பின்னணி
tami nadu September 14, 2018,
“குணமா சொல்லனும்" என்று கூறி வைரலான சிறுமி ஸ்மித்திகா படிப்பு, ஓவியம், நடனம் என்று அனைத்திலும் திறமையானவர் என்கிறார் அவரது தாய்.
“வாயால குணமா சொல்லனும்” என்று வைரலான வீடியோவில் மழலை மொழியில் கெட்டிக்காரத்தனமாக பேசும் சிறுமியின் பெயர் ஸ்மித்திகா. திருப்பூர் மன்னறை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ், பிரவீணா தம்பதியின் 5 வயது மகளான ஸ்மித்திகா, அங்குள்ள தனியார் பள்ளியில் யூ.கே.ஜி படித்து வருகிறார். சுட்டிப்பெண் ஸ்மித்திகா படிப்பு, நடனம் உள்ளிட்ட அனைத்திலும் சிறந்து விளங்குபவர்.
Read Also -> திமுகவின் முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலு தேர்வு
.png)
Read Also -> விநாயகர் ஊர்வல மோதல் : நெல்லையில் 144 தடை உத்தரவு
பள்ளிக்கு சென்ற ஸ்மித்திகா, கொடுத்தனுப்பிய திண்பண்டத்தை சாப்பிடாமல் திருப்பி கொண்டு வந்ததால், அவரது தாய் மிரட்டி லேசாக அடித்துள்ளார். அதற்கு சிறுமி சொன்ன பதிலே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிறுமி ஸ்மித்திகா பேச துவங்கியது முதல் அவளது சுட்டித்தனமாக செயல்கள் ஒவ்வொன்றையும் வீடியோ பதிவு செய்து, பிரகாஷூக்கு காண்பிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் பிரவீணா. அப்படி விளையாட்டாக பதிவு செய்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. வீடியோ வெளியாகி சில நாட்கள் ஆன பின்னரும் கூட சிறுமியின் மழலைப் பேச்சு தொடர்ந்து வைரலாகி வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> “குணமா சொல்லனும்” – திறமையான சுட்டிப்பெண்ணின் பின்னணி