தொழில் போட்டி காரணமாக காங்., பிரமுகர் கொலை.. 6 பேர் கைது..!
tami nadu August 2, 2018,
புதுச்சேரியில் வட்டார காங்கிரஸ் துணை தலைவரை தொழில் போட்டி காரணமாக கூலிப்படை வைத்து கொலை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியை அடுத்த காலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஜோசப் (எ) ரவி. இவர் காங்கிரஸ் கட்சியில் வடக்கு மாவட்ட துணை தலைவராக செயல்பட்டு வந்தார். இவர் நேற்று முன் தினம் தனது இருசக்கர வாகனத்தில் காலாப்பட்டில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த போது தமிழக பகுதியான பெரிய முதலியார்ச்சாவடி அருகே ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டார். இதில் நிலைகுலைந்து கிழே விழுந்த அவரை புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே ஜோசப் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சம்பவத்தை பற்றி அறிந்த முதல்வர் நாராயணசாமி மருத்துவமனைக்கு சென்று நேரில் பார்த்து ஜோசப் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆரோவில் போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடிவந்தனர்.

அதன்படி இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சந்திரசேகர், செல்வக்குமார், பார்த்திபன் முகுந்தராஜ், குமரேசன், ஆனந்தன் ஆகிய 6 பேரை ஆரோவில் போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காலாப்பட்டில் செயல்படும் தனியார் ரசாயன தொழிற்சாலை விரிவாக்கம் விவகாரம் தொடர்பாக ஜோசப்க்கும், சந்திரசேகர் என்பவருக்கும் தொழில் போட்டி ஏற்பட்டு அதன் காரணமாகவே கூலி படையை ஏவி கொன்றது தெரியவந்தது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> தொழில் போட்டி காரணமாக காங்., பிரமுகர் கொலை.. 6 பேர் கைது..!