2 குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட தாய்
tami nadu July 13, 2018,
கணவனின் சந்தேக குணத்தால் மதுரையில் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சத்யசாய் நகரைச் சேர்ந்த ராஜா – மைக்கேல் ஜீவா தம்பதியினருக்கு ஹரிதா என்ற 4 வயது மகளும், ஹரிகிஷோர் குமார் என்ற மூன்று வயது மகனும் இருந்துள்ளனர். கணவன் – மனைவி இடையே அடிக்கடி சண்டை இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றிரவு ராஜா வேலைக்குச் சென்ற நிலையில், மைக்கேல் ஜீவா தனது இரண்டு குழந்தைகளையும் சினிமா பாணியில் பிளாஸ்டிக் பையை வைத்து முகத்தையும், கைகளையும் கட்டி கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

காலையில் அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டத்தில் மைக்கேல் ஜீவா எழுதிய தற்கொலைக் கடிதம் கிடைத்திருக்கிறது. அதில், கணவனின் சந்தேகம் காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாக மைக்கேல் ஜீவா எழுதியிருந்தது தெரியவந்திருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> 2 குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட தாய்