திருட வந்தேன் பணம் இல்ல, அதனால தீயை வெச்சேன் திருடனின் விரக்தி

திருட வந்தேன் பணம் இல்ல, அதனால தீயை வெச்சேன் திருடனின் விரக்தி

tami nadu

திருட சென்ற இடத்தில் பணமில்லாததால் விரக்தியடைந்த திருடன்,  டாஸ்மாக் கடைக்கு தீவைத்து சென்றது நெல்ல மாவட்டத்தில் பரபரப்பை உண்டாகியுள்ளது.

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள மேலக்கடையநல்லூரில் டாஸ்மாக் கடை எண் 10691 செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால் இந்தக் கடையில் எந்த நேரமும் கூட்டம் அலைமோதும். இதனால் இந்த டாஸ்மாக் கடையில் மட்டும் 19 பேர் வேலைப்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலையில் டாஸ்மாக் கடையில் பாடில்கள் வெடிக்கும் சத்தம் கேட்டுப் அந்த வழியாக சென்றவரகள் திரும்பி பார்த்தப்போது  டாஸ்மாக் கடை தீ பற்றி எறிவதைப் கண்டனர். உடனே அருகாமையில் உள்ள கடையநல்லூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். 

விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். தகவல் அறிந்து சம்ப இடத்திற்கு வந்த காவல்துரையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இந்த கடையின் ஒரு நாள் வியாபாரம் சுமார் 5 லட்சத்துக்கும் அதிகம் எனவும், கடந்த 3 தினங்கள் வங்கி விடுமுறை எனவே கடைக்குள் பணம் இருக்கலாம் என்ற நோக்கத்தில் திருட வந்துள்ளனர். டாஸ்மாக் கடைக்கு அருகே உள்ள ஆஸ்பஸ்டாஸ் சீட்டை உடைத்து கடையின் சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்து அங்கு பணம் இல்லாததால் விரக்தியில் தீவைத்து சென்றிருக்க வாய்ப்பு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> திருட வந்தேன் பணம் இல்ல, அதனால தீயை வெச்சேன் திருடனின் விரக்தி

Search

Back to Top